என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆட்டோ டிரைவர் கைது"
- மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் நடித்து அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை ஆட்டோ டிரைவர் கற்பழித்தார்.
ஆவடி:
ஆவடியை அடுத்த பட்டாபிராம் பாரதியார் நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி பட்டாபிராமில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 24-ந்தேதி மாலையில் மாணவி பள்ளியில் இருந்து வீடு திரும்பினார். அப்போது அவர் சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் மாணவி தனது பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு அன்று இரவு கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
அப்போது ஆவடியை அடுத்த பட்டாபிராம் டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் (வயது38). தனது ஆட்டோவில் வந்து கொண்டிருந்தார். வீட்டை விட்டு வெளியேறிய மாணவி சாலையில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணன் மாணவியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டுள்ளார். ஆட்டோவில் ஏறிய மாணவி எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் எனக் கூறினார்.
இதையடுத்து மாணவிக்கு ஆறுதல் கூறுவது போல் அவரை வெள்ளவேடு அருகே மறைவான இடத்துக்கு கடத்தி சென்று மாணவியை கொடூராக கற்பழித்தார்.
அப்போது மாணவி கூச்சலிட்டார். உடனே அங்கிருந்து ராமகிருஷ்ணன் தப்பி சென்று விட்டார். பின்னர் அந்த மாணவி அங்கிருந்து சாலை வழியாக தப்பி ஓடி வந்தார். இதைப் பார்த்து அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும், பொதுமக்களும் அவரை மீட்டு வெள்ளவேடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் ஆவடி மகளிர் போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது.
இது குறித்து மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஆட்டோ டிரைவர் ராமகிருஷ்ணனை ஆவடி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.
- கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே கோட்டலாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 27). ஆட்டோ ஓட்டி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்தவர் கனிமொழி (25). இவர் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார்.
இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்ததனர். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழியை, சக்திவேல் திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரது வீட்டில் கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். இதனால் கனிமொழி 5 மாதம் கர்ப்பம் ஆனார்.
அதிர்ச்சி அடைந்த கனிமொழி தன்னை திருமணம் செய்து கொள்ள சக்திவேலை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கனிமொழி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் வள்ளி விசாரணை செய்து சக்திவேலை கைது செய்தார்.
- 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த வாலிபர்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து போலீசார் விசாரணை
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (23).
ஆட்டோ டிரைவர்.இவர் லிங்கவாடி பகுதியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் நத்தம் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் விசாரணை செய்த நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆட்டோ டிரைவர் சுரேசை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்